16.9.10

இரணைமடுக் குளமும் நீர்ப்பாசனமும்

திருமதி சுபாஜினி உதயராசா
புவியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

(வீரகேசரியில் வெளியான ஆய்வு)

இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள 103 ஆற்று
வடிநிலங்களில் வட மாகாணத்தில் மிகுந்த
முக்கியத்துவம் வாய்ந்ததும் மிகப் பெரியதுமான
ஆற்று வடிநிலம் கனகராயன் ஆற்று வடிநிலமாகும்.

இந்த ஆறு 90 கிலோமீற்றர் நீளமானதும் 906 சதுர
கிலோமீற்றர் நீரேந்து பரப்பையும் (Catchments area)
கொண்டுள்ளது. (Arjuna’s Atlas of Sri Lanka page 26).

இது சேமமடுக் குளத்தில் உற்பத்தியாகி வடக்கு நோக்கி ஓடி தட்டுவன்கொட்டி
ஊரியான் பகுதியை அண்டிய ஆனையிறவு கிழக்கு கடனீரேரியில்
சங்கமிக்கின்றது. இதன்மூலம் வருடம் ஒன்றிற்கு சராசரி
24 மில்லின் கனமீற்றர் நீர் வெளியே செல்கின்றது
எனக்கணிப்பிடப்பட்டுள்ளது. (The National Atlas of Sri Lanka – 1989).

கனகராயன் ஆற்றின் வடி நிலப்பரப்பில் சேமமடுக்குளம்,
கனகராயன்குளம், இரணைமடுக்குளம் போன்ற பெரிய
நீர்ப்பாசனக் குளங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய
நீர்ப்பாசனக் குளங்களும் உள்ளன. கனகராயன் ஆற்று
வடிநிலத்தினுள் அமைந்து காணப்படுவதும் வடமாகாணத்தில்
மிகப்பெரியதுமான நீர்த்தேக்கம் இரணைமடு ஆகும்.

கனகராயன் ஆற்றினால் ஆனையிறவு கடல் நீரேரியில்
வீணே கொட்டப்படும் நீரைத்தேக்கி விவசாயத்திற்கு
பயன்படுத்த வேண்டியதன் நோக்கத்தை 1879 ஆம்
ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச அதிபராக
இருந்த சேர் வில்லியம் துவைனம் என்பவர் அரசிற்கு
வற்புறுத்தினர்.

இதனை அடுத்து இலங்கை நீர்ப்பாசனக் பகுதியினரால் இரணைமடு நீர்த்தேக்கத்தினை அமைக்கும் பணி 1902 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 1920 ஆம் ஆண்டு நிர்மாணித்து முடிக்கப்பட்டு 22 அடி உயர நீரைக் கொள்ளளவாகப் பெறும் நிலைக்கு கொண்டுவரப்பட்டது.

இது கடல் மட்டத்திலிருந்து 26.7 மீற்றர் (89அடி) உயரத்தில்
40,000 ஏக்கர் அடி நீரைத் தேக்கக்கூடியதாக அமைக்கப்பட்டது.
இரணைமடுக்குளத்தின் (கட்டுமானப் பணிகள்) புனரமைப்பு
வேலைகள் நான்கு முறைகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பௌதிகப் பின்னணி
வடிகாலின் அமைப்பினையும் விருத்தியினையும்
தீர்மானிப்பதில் பௌதிகப் பின்னணி முக்கிய இடம்
வகிக்கின்றது. இவற்றில் புவிச்சரிதவியல்,
தரைத்தோற்றம், மண்வளம், காலநிலை,
இயற்கைத்தாவரம் போன்றன
பிரதான இடத்தினை பெற்றிருக்கின்றபோதும்
இங்கு தரைத்தோற்றமும் காலநிலையும்
சுருக்கமாக

ஆராயப்பட்டுள்ளது.



தரைத்தோற்றம்

தரையின் மேற்பரப்பு அம்சங்களையும் தரையுயர்ச்சி மற்றும்
குத்துயர வேறுபாடுகள் போன்றவற்றையும் விளக்குவதே
தரைத்தோற்றமாகும்.

கனகராயன் ஆற்றுவடிநிலம் 100 மீற்றர் உயரத்திற்கு
குறைந்ததாகவும், மென்சாய்வினை உடைய தட்டையான
மேற்பரப்பையும் கொண்டு காணப்படுகின்றது.

இத்தகைய தரைத்தோற்ற இயல்பிற்கேற்ப இவ்ஆறு
90 மீற்றர் உயரப் பிரதேசத்தில் அமைந்துள்ள சேமமடுக்
குளத்தில் உருவாகி தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய
சமவெளி ஊடாகப் பாய்ந்து 30 மீற்றர் உயரத்தினுள்
இணைந்து காணப்படும் இரணைமடு நீர்த்தேக்கத்தினுள்
நீரினைச் செலுத்தி மேலதிக நீர் 3 மீற்றரிலும் குறைந்த
உயரமுடைய ஆனையிறவு கடனீரேரியினுள் சென்றடைகின்றது.

இரணைமடு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுப்பகுதி மாத்திரமே
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 106,500 ஏக்கரடி
நீரினைத் தேக்கக்கூடிய அதனது ஏனைய பகுதிகள்
முல்லைத்தீவு மாவட்டத்தினுள் அமைந்துள்ளது.

காலநிலை
காலநிலையைப் பொறுத்தவரையில் வெப்பநிலையும்
மழைவீழ்ச்சியும் முக்கியம் பெறுகின்றன. இரணைமடுக்குளப்
பிரதேசத்தின் உயர் வெப்பநிலையாக 90 பாகை பரனைற்றும்
இழிவு வெப்பநிலையாக 73 பாகை பரனைற்றும் நிலவுகின்றது.

மே மாதம் முதல் செப்ரெம்பர் மாதம் வரை அதிக வெப்பநிலை
இங்கு நிலவும். கனகராயன் ஆற்று வடிநிலப்பிரதேசத்திற்கு
வடகீழ் பருவக்காற்றின் மூலம் மழைவீழ்ச்சி கிடைக்கின்றது.

இக்காற்று வங்காள விரிகுடாவிற்கு ஊடாக வருவதனால்
ஈரத்தன்மையைப் பெற்று வரண்ட வலயத்தில் அதனை
படியச்செய்வதன் மூலம் வடிநிலப்பிரதேசம் முழுவதும்
வடகீழ் பருவக்காற்றால் ஒக்ரோபர் தொடக்கம் பெப்ரவரி
வரை மழைவீழ்ச்சியைப் பெறச்செய்கின்றது.

இத்தகைய மழைவீழ்ச்சி, வெப்பநிலை நிலைமைகளினால்
வடிநிலப் பிரதேசத்தில் அமைந்து காணப்படும். நூற்றுக்கும்
மேற்பட்ட குளங்களில் நீர் தேக்கப்பட்டு சிறு சிறு கிளையாறு
களினால் பிரதான ஆற்றினுள் சேர்க்கப்பட்டு நவம்பர் மாத
முற்பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் கனகராயன் ஆறானது
ஏறத்தாழ மூன்று மாதங்கள் வரை ஓடி பின் பெப்ரவரி
மாதமளவில் நீரின்றி அல்லது அதன் சில இடங்களில் மட்டும்
நீரைக் கொண்டதாகக் காணப்படும். இத்தகைய நிலைமைகளே
இரணைமடுக்குளப் பிரதேசத்திலும் காணப்படுகின்றது.




நீர்ப்பாசனம்

1920களில் இரணைமடுக்குள நிர்மாண
வேலைகள் குறிப்பிடத்தக்க அளவில்
நிறைவுபெற்ற நிலையிலும்கூட இந்நீரை
பயன்படுத்தி உற்பத்தி செய்கையில்
சாதனை படைக்கும் நிலை அப்போது
காணப்படவில்லை.

இரணைமடுக்குளம் அமைக்கப்பட்ட
காலத்தில் அதன் முன்னணி
நிலத்தில் மானாவாரி நெல் வயல்கள்
இருந்தன. அவை பரவிப்பாஞ்சான்
என்ற கண்டமாக விளங்கின. கனகராயன் ஆறும் திருவையாறும்
தங்குதடையின்றிப் பரவிப்பாய்ந்த பகுதி இதுவாகும்.

இரணைமடுக்குளம் அமைக்கப்பட்டதும் 1936இல் பரவிப்பாஞ்சான்
பகுதியில் வயல்காணிகள் அவற்றை செய்கை பண்ணியவர்களுக்கே
பகிர்ந்தளிக்கப்பட்டன. இதே ஆண்டில் கணேசபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட
குடியான்கள் குடியேற்றத்திட்டம் மூலம் முதலாவது நீர்ப்பாசன
விவசாய செய்கைமுறை இப்பிரதேசத்தில் இடம்பெறத் தொடங்கியது.

1950களை அடுத்து யாழ் குடாநாட்டின் சனத்தொகைப் பெருக்கமும்,
நிலப்பஞ்சமும் வன்னிப் பிரதேசத்தின் குடியேற்றங்களைத் தூண்டுவித்தன
. இதன்பொருட்டு இரணைமடுக்குளத்தின் இடது கரைக் கால்வாயை
அடிப்படையாகக்கொண்டு 1950இல் உருத்திரபுரம் 10ஆம் வாய்க்கால்
குடியேற்றத்திட்டம் உருவாக்கப்பட்டது.

இரணைமடுக்குளத்தின் இடதுகரைக்கால்வாயை அடுத்துக் காடாகக்
கிடக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை விருத்தி செய்ய
முடியும் என உணரப்பட்டபோது இரணைமடுக்குளத்தின் நீர்க்
கொள்ளளவை அதிகரிக்க வேண்டிய அவசியமேற்பட்டது.
இதனால் 1951இல் இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டு
மீண்டும் 28 அடியாக உயர்த்தப்பட்டு நீர்க்கொள்ளளவு 71,000
ஏக்கரடியாக்கப்பட்டதுடன் 1952இல் உருத்திரபுரம் 8ஆம்
வாய்க்கால் குடியானவர் குடியேற்றத்திட்டமும் உருவாக்கப்பட்டது.

இரணைமடுக்குளத்திலிருந்து வலதுகரைக் கால்வாய் 1952இல்
அமைத்து முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1953இல் வட்டக்கச்சி
குடியேற்றத்திட்டமும் 1954இல் மூன்றாவது தடவையாக
இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டு 30 அடியாக உயர்த்தப்பட்டு
அதன் நீர்க்கொள்ளளவு 82,000 ஏக்கரடியாக அதிகரிக்கப்பட்டு
1955இல் ஆறாவது குடியேற்றத்திட்டமாக இராமநாதபுரமும்
உருவாக்கப்பட்டது.

இவ்வாறாக இரணைமடுக்குளத்தின் கீழான குடியானவர்
குடியேற்றத்திட்டங்கள் மட்டுமன்றி 1955இல் கண்டாவளையில்
(1740 ஏக்கர்) 696 ஹெக்ரேயர் தாழ் நிலங்கள் 4 ஹெக்ரேயர் (10 ஏக்கர்)
வீதமும், 1958இல் புளியம்பொக்கணையில் 800 ஹெக்ரேயர்
(2000 ஏக்கர்) தாழ்நிலங்கள் நான்கு ஹெக்ரேயர் வீதமும்,
200 மத்தியதர வகுப்பினருக்கும் வழங்கப்பட்டது.

மேலும் திருவையாற்றில் இரணைமடுக்குளத்தை சூழ்ந்த பரப்பில்
108 ஹெக்ரேயர் (270 ஏக்கர்) 27 மத்தியதர வகுப்பினருக்கும்
வழங்கப்பட்டது. இவற்றுடன் இராமநாதன் கமம், புதுமுறிப்புக்குளம்,
பகுதியிலும் மத்தியதர வகுப்பினர் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இவை தவிர 1966இல் இரணைமடு ஏற்று நீர்ப்பாசன வசதியோடு
திருவையாறு படித்த வாலிபர் திட்டம் மூன்று கட்டங்களாக உருவாக்கப்பட்டு
425 இளைஞர்களுக்கு 510 ஹெக்ரேயர் (1275 ஏக்கர்) நிலப்பரப்பும்,
திருவையாறு படித்த பெண்கள் திட்டத்தில் 200 ஹெக்ரேயர் நிலப்பரப்பு
25 பெண்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

திருவையாறு திட்டக் காணிகளுக்கு நீர் வழங்கும் பொருட்டு
1977ஆம் ஆண்டு மீண்டும் நான்காவது தடவையாக இரணைமடுக்
குளத்தின் அணைக்கட்டு 34 அடியாக உயர்த்தப்பட்டு
நீர்க்கொள்ளளவு 106,500 ஏக்கர் அடியாக அதிகரிக்கப்பட்டது.

இரணைமடு நீர்த்தேக்கத்தினால் நீர்ப்பாசனம் செய்யப்படும்
முக்கிய பரப்பாக கனகராயன் ஆற்று வடிநிலத்தின் கழிமுகப்
பகுதியான கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை உதவி அரசாங்க
அதிபர் பிரிவுப் பிரதேசம் விளங்குகின்றது.

இங்கு வருடந்தோறும் பெரும்போகத்தில் மாத்திரம் 30,480 மீற்ற
ர் நீளமுடைய பிரதான கால்வாய்கள், 13,860 மீற்றர் நீளமுடைய
கிளை வாய்க்கால்கள், 156,540 மீற்றர் நீளமுடைய வயல்
வாய்க்கால்கள் என்பவற்றின் மூலம் 8,352 ஹெக்ரேயர் பரப்பிற்கு
பாசனம் செய்யப்படுகின்றது.













இரணைமடு
நீர்த்தேக்க
நீரியற் தரவுகள்


நீர்த்தேக்கத்தின் பெயர் - இரணைமடு
ஆள்கூறு - A/19 (8.35 x 6.57)
நீர்ப்பாசனப் பிரதிப்பணிப்பாளர் பிராந்தியம்
- கிளிநொச்சி
மாவட்டம் - கிளிநொச்சி
நதிப்படுக்கை - கனகராயன் ஆறு
மொத்த நீர்க்கொள்ளளவு - 106,500 ஏக்கர் அடி
நீரேந்து பரப்பு - 906 சதுர கிலோமீற்றர்
விவசாயப் பரப்பளவு - 8354 ஹெக்ரேயர்
நீரெந்து சாய்வு - 1 வீதத்திலும் குறைவு
நீர்கொண்டுவரும் ஆற்றின் நீளம் - 58 கிலோமீற்றர்
பிரதேசத்தின் தன்மை - வரண்டது, சிறுபகுதி மத்திமம்

நீர்த்தேக்கம்
பூரண நீர் விநியோக மட்டம் - 30.3 மீற்றர் (கடல் மட்டத்திலிருந்து 101 அடி)
அதியுயர் வெள்ள நீர்மட்டம் - 32.57 மீற்றர் (108.5 அடி)
பூரண நீர்விநியோக மட்டத்தின் பரப்பளவு - 27,680 ஹெக்ரேயர்
உபயோகிக்கப்படாத நீர்க்கொள்ளளவு - இல்லை
அணைக்கட்டு
மேல்மட்டம் - (கடல் மட்டத்திலிருந்து 33.6 மீற்றர் (112 அடி)
மேல்மட்ட அகலம் - 4.2 மீற்றர் (14 அடி)
அதியுயரம் - 13.5 மீற்றர் (45 அடி)
நீளம் - 2955 மீற்றர் (9850 அடி)
உட்பக்கச்சாய்வு - 1.2 மீற்றர்
வெளிப்பக்கச்சாய்வு - 1.2 மீற்றர்

வான்
இடதுகரை தெளிவான மேலான Radial Gate 30.3 m
(கடல் மட்டத்திலிருந்து 101 அடி)
வலதுகரை உடைப்புப் பகுதி (இயற்கை) -
கடல் மட்டத்திலிருந்து 32.1 m (107 அடி)

துரிசு
இடதுகரை கோபுரத் துரிசு - கடல் மட்டத்திலிருந்து 20.1 m (67 அடி)
வலதுகரை கோபுரத்துரிசு - கடல் மட்டத்திலிருந்து 21m

பிரதான வாய்க்காலின் நீளம் - 30,480 m
கிளை வாய்க்காலின் நீளம் - 13,860 m
பிரிவு வாய்க்காலின் நீளம் - 8,370 m
வயல் வாய்க்காலின் நீளம் - 156,540 m

பொது
இறுதியாக புனரமைக்கப்பட்ட ஆண்டு - 1977
விவசாயப் பரப்பளவு (பிரத்தியேகம்) - 8352.8 ஹெக்ரேயர்
விவசாயப் பரப்பளவு (மதிப்பீடு) - 9,400 ஹெக்ரேயர்

Source: Kilinochchi District Irrigation Department 1993




நீர்ப்பாசனம்
தொடர்பான
பிரச்சினைகள்

இரணைமடுக்குள நீர்ப்பாசனம் தொடர்பாக
பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இதில் மிக முக்கியமானது இரணை
மடுக்குள புனரமைப்பும், கால்வாய்
அபிவிருத்தியும் ஆகும்.

இக்குளத்தின் நீர்க்கொள்ளளவை
அதிகரிக்க குளக்கட்டினை உயர்த்துதல்
அவசியமாகும். 1977ஆம் ஆண்டிற்குப் பின்னர் நீர்ப்பாசனம்
தொடர்பாக எந்த அபிவிருத்தி முயற்சிகளும் மேற்கொள்ளப்
படவில்லை. இக்குளத்தின் மூலம் நீர்ப்பாசனம் செய்யப்படும்
நீர்ப்பாசனக் கால்வாய்கள் அனைத்தும் பாதிப்படைந்துள்ளதனை
நேரடியாக அவதானிக்க முடிந்தது.
அத்துடன் இக்கால்வாய்கள் அனைத்தும் மண் கால்வாய்களாக
இருப்பதால் அவை தூர்ந்துபோய் காணப்படுகின்றன. இதனால்
சில இடங்களில் கால்வாய்களின் ஆழம் குறைவடைவதுடன்
அகலம் அதிகரிக்கின்றது. சில இடங்களில் கால்வாய்கள்
முழுவதும் புற்களும், செடிகளும் வளர்ந்துள்ளன. இதனால்
நீர் ஓட்ட வேகம் தடைப்படுவதோடு புற்களும் செடிகளும்
நீரினை உறிஞ்சிக்கொள்வதால் நீர் தேவையான விவசாயப்
பரப்பிற்கு போதுமான நீர் சென்றடைவதில்லை.

அத்துடன் கால்வாய்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் தமது
வீட்டுக் கழிவுப்பொருட்களான குப்பை கூழங்கள், மிருகக்கழிவுகள்
போன்றவற்றை கால்வாய்களிலே வீசிவிடுகின்றனர்.

மேலும் 1990-1999 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற
இராணுவ நடவடிக்கையினாலும் கால்வாய்கள் பாதிப்படைந்துள்ளன
. இராணுவ நகர்வுகள், பதுங்கு குழிகள், காவலரண்கள் போன்றன
கால்வாய்களுக்கு குறுக்காகவும் நெடுக்காகவும் அமைக்கப்பட்டிருந்தன.

அத்துடன் விமானக் குண்டு வீச்சுக்களும், ஷெல் தாக்குதல்களும்
கால்வாய்களின் கட்டமைப்பினை சீர்குலைத்துள்ளன.குறிப்பாக
உருத்திரபுரம் D1,D2,D9, D10, முரசுமோட்டை, பரந்தன் பகுதிகளில்
உள்ள கால்வாய்கள் முழுமையாக இராணுவ நடவடிக்கையினால்
பாதிப்படைந்துள்ளன.

பிரதானமான கால்வாய்கள் உள்ள பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள
கண்ணிவெடிகளும் கால்வாய்களின் அபிவிருத்தியை இன்றுவரை
தடைப்படுத்தியுள்ளன.

கால்வாய்கள் மட்டுமன்றி மதகுகள், நீர்த்தடுப்பு பலகைகள், சுலுசுகள்
முதலியனவும் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளமை நீர்ப்பாசனத்தில்
காணப்படும் மற்றொரு பிரச்சினையாகும்.

திருவையாற்றுப் பிரதேசத்திற்கு நீரை வழங்கிவந்த ஏற்று நீர்ப்பாசன
ப் பம்புகள் யாவும் 1988இற்கு பின்னர் செயலிழந்துள்ளமையும் ஒரு
முக்கிய பிரச்சினையாகும். இதுமட்டுமன்றி இரணைமடுக்குள
நீர்ப்பாசனத்தோடு தொடர்புபட்ட ஏராளமான பிரச்சினைகளை மேலும்
குறிப்பிடலாம்.





எதிர்காலத் திட்டங்கள்
இலங்கையின் நீர்ப்பாசனத்
திணைக்களத்தால் கனகராயன் ஆற்று
வடிநிலப்பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட
முதலாவது நீர்த்தேக்கமான இரணை
மடுக்குளம் H.T.S Ntl; (H.T.S.Ward) என்ற
நீர்ப்பாசனப் பணிப்பாளரினால் 1902ஆம்
ஆண்டில் தயாரிக்கப்பட்ட வேலைத்திட்ட
அறிக்கை சார்ந்து நிர்மாணிக்கப்பட்டதாகும்.

90 கிலோமீற்றர் நீளமான கனகராயன்
ஆற்றை மறித்து கட்டப்பட்ட அணை
மூலம் இந்நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின்
அபிவிருத்தியை முதன்மை நோக்கமாகக்
கொண்டிருந்தபோதும் வரண்ட
வலயத்தின் மிகப்பெரும் வரட்சிப் பகுதியாகிய யாழ்ப்பாணக்
குடாநாட்டின் நீர்வள அபிவிருத்தியுடன் இது தொடர்புபட்டிருக்கின்றது.
இதற்கென நாட்டின பெரும் திட்டமென வர்ணிக்கப்படும்
மகாவலிகங்கை அபிவிருத்தி திட்டத்துடனும் இது இணைப்புச்
செய்யும் முன்மொழிவையும் கொண்டிருக்கிறது.

இலங்கையின் நிலப்பரப்பில் 4,000 சதுரமைல் பிரதேசத்தை
உள்ளடக்கும் 900,000 ஏக்கர் பரப்புக்களை அபிவிருத்தி செய்யும்
நோக்கில் மகாவலி கங்கை பாயும் 43 இலட்சம் சதுரஅடி நீரை
நாட்டின் உலர் வலயத்திற்கு பயன்படுத்தும் இப்பெரும்
திட்டத்துடன் இக்குளம் இணைக்கப்பட்டிருக்கிறது.

1902இன் வேலைத்திட்ட அறிக்கையானது NCP வாய்க்கால்
ஒன்றை மகாவலி ஆற்றிலிருந்து கனகராயன் ஆற்றுக்கு
திருப்பும் நம்பிக்கையைக் கொண்ட முன்மொழிவும்
இணைக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான
சூழ்நிலையை தொடர்ந்து இரணைமடுக்குள நீர்ப்பாசன
நடவடிக்கையிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இரணைமடுவிலிருந்து குழாய் மூலம் யாழ்ப்பாண
குடாநாட்டிற்கு நீர் விநியோகம் செய்யும் திட்டம் குறித்து
ஆலோசனை செய்யப்படுகின்றது.

அதாவது யாழ்ப்பாணப் பிரதேசத்திற்கான குடிதண்ணீர்
உட்பட நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடுக்குளத்திலிருந்து
குழாய்மூலம் ஆனையிறவு ஊடாக யாழ் குடாவிற்கு நீரை
எடுத்து வந்து விநியோகம் செய்வதற்கான திட்டம் குறித்து
ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இத்திட்ட நடைமுறைக்காக சுமார் 300 கோடி ரூபா வரை
தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப்பாரிய நீர்ப்பாசனத்
திட்டம் சாத்தியமாகும். பட்சத்தில் சில வருட காலத்தில்
இத்திட்டம் பூர்த்தி அடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்திட்டம் செயற்படுத்தப்படும் போது இரணைமடுக்குளத்தின்
கட்டு மேலும் உயர்த்தப்பட்டு செப்பனிடும் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தால் குடாநாட்டில் நிலத்தடி நீர் பயன்பாடு
குறையும் சாத்தியம் உண்டெனவும், ஆனையிறவு ஊடாக
அமைக்கப்படும் நீர்க்குழாய் கொடிகாமத்திலிருந்து
பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு நீர் விநியோகம்
மேற்கொள்ளப்படுமெனவும் எதிர்காலத்தில் கிணற்று
நீரின் தன்மைகள் மாறிவரும் நிலையில் (உவராதல்)
இத்திட்டம் அவசியமானதெனவும் கருதப்படுகின்றது.

இரணைமடுக்குளத்தில இருந்து யாழ்ப்பாணத்திற்கு
தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தில் முதலாவதாக
இரணைமடுக்குளம் ஆழமாக்கப்பட்டு குளக்கட்டுக்கள்
உயர்த்தப்பட்டு நீர்க்கொள்ளவை அதிகரிக்க வேண்டும்.
இல்லையேல் கிளிநொச்சி மாவட்ட விவசாய நிலப்
பரப்புக்கள் யாவும் நீர்ப்பற்றாக்குறைவால் பயன்படுத்த
முடியாத நிலை தோன்றும். இதனால் விவசாயிகள்
முழுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இவ்வாறாக இரணைமடு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு
காலத்திற்குக்காலம் உயர்த்தப்பட்டு நீர்ப்பாசனம்
செய்யப்படும் பரப்பளவு அதிகரிக்கப்பட்டாலும் இன்றும்
பல குறைபாடுகளைக்கொண்டே காணப்படுகின்றது.

தற்போதைய நிலையில் கடந்த பல வருடங்களாக குளம்
புனரமைப்பு செய்வதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை
பெருமளவில் மேற்கொள்ளாமல் சிறுசிறு பராமரிப்பு
வேலைகளை மேற்கொள்வதற்கு மட்டும் நிதி ஒதுக்கீட்டை
செய்துள்ளது. இதனால் இடது, வலது கரை வாய்க்காலில்
உள்ள கட்டுமானங்கள் முழுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது.

அணைக்கட்டும் பாதிக்கப்பட்டு வலுவிழந்த நிலையில் உள்ளது.
வான் பகுதி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலையில் நீர் முகாமைத்துவம் மேற்கொள்ள
முடியாது. கணிசமான அளவு நீர் வீண்விரயமாகின்றது.
இதனால் எமது வளத்தின் பெரும் பகுதியை நாம் இழந்து
கொண்டிருக்கின்றோம்.


...ஈழத்தின் வடபுலத்தில் ஓரூர் மட்டுவில் அதன் வரலாற்றுப் பெயர் சந்திரபுரம்.......





உலகின் எங்கோ ஓர் மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் பொங்கி எழுகின்றதா... அப்படி என்றால் நீங்களும் எனது தோழரே... சே குவேரா..

கவிதைகள்சில
~~~~~~~~~~~~~~~


To Isaipriya

My Sister,
My Mother,
My Comrade

by Karthik RM
on December 15, 2010

Many a disease plagues this world
But none so devastating
as the silence of those
that can speak.
I speak today,
I cry today,
for you. My Sister,
My Mother, My Comrade.

My Sister! With music
in your name.
The ‘isai’ of your sacrifice
like that of my other sisters
Manorama, Nilofar, Phulmoni
will be sung for ages to come
in songs of our resistance
This I promise,
your brother, a sorry being
whose only weapons
are his words.

My Mother! I was born
as your son the day
the child of your womb
was killed. Mother,
I am your son.
As I am the son of the mothers
of Eelam, Kurdistan, Palestine.
A son who seeks justice
for unheard voices,
for untold horrors,
for unspoken miseries.
A sorry being, your son,
whose only weapons
are his words.

My Comrade! I claim to live
(rather shamelessly)
for the cause you died for,
a people longing for freedom,
a soil aching for peace,
a love for life,
now facing despair,
now facing death.
As my eyes see
what has been done to you
tears pour – as words.
Words. The only weapons of
a sorry being, your comrade.
Oh dove of freedom
torn apart by vultures of lust!
Oh lamb of peace
prey to jackals of power!
Oh angel of justice!
Oh goddess of liberty!
She lies there, naked
and ravaged
by creatures called ‘men’
Disrobed was not your body,
but the farce called Lanka.
Violated was not you,
but the notion of humanity.
Raped, again and again,
was the silence
of those that can speak,
but who chose not to.
But I speak today,
I cry today.
Your sibling, your son,
your comrade.
Now a man.
Now a walking corpse.
Whose only weapons
are his words.
As of now…






தமிழீழத் தமிழச்சி

தமிழீழத் தமிழச்சி
என்பதால்
என் தாயும்
விதவையே
என் சகோதரியும்
விதவையே
என் நண்பியும்
விதவையே.....!
அன்று
கிருசாந்தியை புதைத்த போது
வாய் பொத்தியிருந்தாய்
இன்று
தர்சினியை எரித்த போது
கண் மூடியிருந்தாய்
உனது
பலதடவை
அறியாமையினால்
எம்மின தமிழ்ப் பெண்கள்
இப்ப
எம்மோடு இல்லை....!
எங்கள்
மிஞ்சியிருக்கும்
கண்மணிகளை
தமிழகத்துக்குள் ஒழித்து
வைத்தால் – அங்கையும்
கருணாநிதியின்
மோப்ப நாய்கள்
பெண்ணாய்
பிறந்த எமக்கு
ஈழத் தமிழச்சியாக வாழ....???

பா.சதீஸ்


கருவறைக் கண்ணீர்

வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி

முகம் தெரியாத தாயே
உன் கருவிலிருக்கும்
கடைசி மகள் எழுதும்
கண்ணீர் கடிதம்.
உனது கருவறைச்
சுவர்களில் – எனது
சுட்டு விரல் தீட்டும்
ஓவியம் புரிகிறதா? –நீ
பிரசவித்த என்
முன்னவர்களைக் காணோமென்று
கதறும் ஒலி என்
காதுகளுக்கு கேட்கிறது.
காணமல் போன அண்ணா,
காலில்லா அப்பா,
தடுப்பு முகாமில் மூத்தவன்,
பருவ வயதில் இளையவள்
ஓட்டைக் கூடாரத்தில்
கிளிந்த துணியுடன் நீ
இதற்கிடையில்
நான் ஏனம்மா ….?


எம் தேசம்...!!!

ஊர்திகளின் ஓய்வற்ற அணிவகுப்பால்
ஊமையாய் கண்ணீர் விட்டு,,
வாடி வதங்கி போய் விட்ட நெடுஞ்சாலை...!!

நெருக்கடியும்,,நெரிசலுமாய்
நெளிகின்றது எம் தேசம்...!!
செப்பனிடப்படாத வீதிகள்..
செத்து பிழைக்கின்றன..!

புது புது இன வரவுகளால்,,
புத்துயிர் பெற்று விட்ட வீதியோர
புல்பூண்டுகள்...!!

பதரோடு, மிதிவெடியும்
பதுங்கி கிடக்கும் என்று,,,எம்மவர்
கைவிட்டு காடாகி போன
வீதியோரமெங்கும்...
கல் வைத்து தீ மூட்டி,,,
கதிரை போட்டமர்ந்து,,,
கை நனைக்கும் வேற்றின மக்கள் தொகை..
குடியிருக்கும் தமிழனை விட அதிகமாய்...!!

பூர்விகமாய் காலங்காலமாய்..
குடியிருந்த எம்முறவுகளை...
காணவில்லை...
எம்மண்ணிலே....

சுற்றுலா என்று..
சுற்றி பார்க்க வருபவர்கள்...
அநாதரவான நிலத்திலே...
அத்து மீறி நிரந்தரமாய்
குந்தி விட்டாலும்...
ஆச்சரியப்படுவதற்கில்லை...!!

ஆக்கிரமிப்பையும்
அடிமைத்தனத்தையும்
ஆசைப்பட்டு ஏற்றுக்கொண்ட இனம்
அல்லவோ எம்மினம்..!!!
அதனால் - இந்த
அத்துமீறலையும்
அன்போடு ஏற்றுக்கொள்ளட்டும்...!!

- அரசி -

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


ராஜாவே உனக்கென்றே
ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
சுஜாதா


கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்

சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்
கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்

மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்

ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்

தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்

குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்

சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !

சர்வதேச குழந்தைகள் வருடம் அறிவிக்கப்பட்டபோது, சுஜாதா எழுதிய கவிதை இது.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


நில் கவனி
யாரிந்த முத்துக் குமார்?





குருதி வெறி கும்பல்களுக்கு
உடல் சுட்டு இன அடையாளம்
காண்பித்தவன்!

இரத்தம் சுடும் உறவிருந்தும்
ஒதுங்கி நின்ற தமிழகத்தில் -
யுத்தம் புகும் உணர்வூட்டியவன்!

தொப்புள் கொடி உறவறுத்து
ஈழத் தமிழ் இனத்திற்காய் -
தீ புகுந்து தமிழர் உள்ளம் தொட்டவன்!

யார் குற்றமும் பகிராமல்
என் போன்ற இளைஞன் குற்றமென
நெற்றி பொட்டில்
நெருப்பெய்தி அறிவித்தவன்!

தமிழர்கள் எங்கோ கொன்று குவிக்கப் படுவதை;
செய்தித் தாள், வார இதழ்,
வானொலி, தொலைகாட்சி,
இணையமெல்லாம் தலைப்பு செய்தியாகி
சூடு சொரணையோடு
எல்லோரையும் –
திரும்பிப் பார்க்க வைத்தவன்!

குடும்பத்தின் பெயர்
தேசத்தின் விலாசம்
என் மக்களின் எல்லை - ஈழம் வரையென எரிந்து
கருகி கர்ஜித்தவன்! தன் உயிர் சுட்ட
நெருப்பின் அனலில்
அவன் முகம் பொசுக்கி
நம் பனியன்களுக்கும் போஸ்டர்களுக்கும்
படம் வரைந்துக் கொள்ள –
உயிர் மை கொடுத்தவன்!

ஏது செய்தும்; என்ன செய்வோம்
ஈழம் விட்டெங்கோ சென்று -
இனி அவன் நினைவு நாளில்
மறவாமலொரு மாலை போட்டு –
நினைவு கொள்வோம்!

வித்யாசாகர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2010

நான்
போட்டி
பொறாமை
காட்டிக்கொடுப்பு
கட்சி
ஏற்றம்
தாழ்வு
அடிமைத்தனம்
மாற்றமில்லா பூமியில்
ஆண்டின் மாற்றமும்
அதன் வேகமும்
பிடித்தால் என்ன
பிடிக்காவிட்டால் என்றபடி
வந்தும் போய்க்கொண்டும்தான்.

இதைவிடப்
போர்
நோய்
இயற்கை என
அழிப்புக்களும் இடைக்கிடை.
வருந்தாத வருஷம் மாறியபடிதான்.

நாயும் நரியுமாய்
போட்டி போடும் அரசியலின்
நடுவில் இறைச்சித் துண்டாய்
என் இனம் என் தேசத்தில்.
பசி வறுமையோடு
இரத்தம் தோய்ந்த வருடம்
அங்கும் சிவப்பாய் வந்தபடிதான்.

என்றாலும் பனிபடர்ந்த பூமிக்குள்
என் வெப்பக் கண்ணீர் தெளித்தே
உரு(க்)கியபடி வழ்ந்துகொண்டிருக்கிறேன்.

தீபாவளி புத்தாண்டு என்றில்லாமல்
நித்தம் சிவப்பு வைனும்
ஆட்டிறைச்சியும்
முட்டையும்
சலாட்டுமாய்த் தின்று
திடமாயிருக்கிறேன்.

எப்படிச் சொல்ல நான்
என் இனத்திற்கு
"உங்களுக்கு வாழ்த்து" என்று.
வாழ்கிறார்களா அவர்கள் !!!

ஹேமா
(சுவிஸ்)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தாங்கவா
தைப்பாவாய்!


வானம் விழுந்துருகி
மாகடலும் நீராடி
மான நிலமெங்கும்
வண்டல் கரைந்தோடிக்
கானம் எடுத்துவந்து
காற்றுக் குளிர்ந்தாடித்
தேனார் வயல்மருங்கில்
செந்நெல் விளைந்தாடித்
தானம் தவமிரண்டும்
தங்கக் குலம்பாடிப்
போன தலைமுறைகள்
பொங்கிக் களித்ததெலாம்
ஈனத் தரக்கர்களால்
இன்று அழிந்ததடி
மானே வதையெல்லாம்
மாற்றவா தைப்பாவாய்!

பேயாய் அரக்கரொடும்
பிசாசுப் படைகளொடும்
தீயாய் எரிந்தநிலம்
தீம்புனல்கள் நச்சாகித்
தாயும் மடியுறங்கும்
தங்கக் குழந்தைளும்
ஆயதந்தை மைந்தர்
அறிவார்ந்த ஏந்திளையர்
தோயக் கொலையாடித்
துடிக்கச் சதிராடித்
தூய தமிழினத்தைத்
செக்கிற் புதைத்தவர்கள்
நாயாய் இருந்துலவி
நரியான வேளையிலே
தாயே மணிநிலத்தைத்
தாங்கிவா தைப்பாவாய்!

- புதியபாரதி


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ்ப்பேறு! தவப்பேறு!

தாய்மொழி என்பது தாயின்மொழி- அது
தாயும் நீயும் பேசும்மொழி
ஆயிரம் மொழிகள் நீயறிந் தாலும்
ஆன்மா உணர்மொழி அந்தமொழி – அது
அன்னையின் கருவில் வந்தமொழி!

அன்னையின் மடியில் கிடக்கையிலே – அவள்
அன்பினைப் பாலாய்க் குடிக்கையிலே
சின்னவுன் செவியில் சில்லெனப் பாய்ந்து
தேனாய் இனித்திடக் கேட்டமொழி – உன்
சிந்தையில் விதைகள் போட்டமொழி!

தோளிலும் மார்பிலும் சாய்கையிலே – நீ
தொட்டிலில் ஆடி ஓய்கையிலே
ஏழிசை மிஞ்சிடும் தாயிசை கேட்டே
இதமாய்த் தூங்கிய பாட்டுமொழி – அது
இதயங்கள் பேசிடும் வீட்டுமொழி!

அன்னையை அழைத்தே அழுகையிலே – அவள்
அணைத்ததும் உடன்நீ சிரிக்கையிலே
தன்னிலை மறந்தே தாய்மனம் பொங்கி
தவிப்புடன் உன்னைக் கொஞ்சுமொழி – அது
தரணியில் எதையும் மிஞ்சுமொழி!

தொல்லைகள் அறியாப் பருவத்திலே – நீ
துருதுருத் தாடிய உருவத்திலே
பல்லுமில் லாமல் சொல்லுமில் லாமல்
பலகதை சொல்லிய மயக்குமொழி – அது
பயிலுமுன் பேசிய இயற்கைமொழி!

உன்னுடன் இணைந்தே பிறந்தமொழி – உன்
உள்ளமும் உணர்வும் புரிந்தமொழி
எண்ணியல் என்ன மின்னியல் என்ன
எதையும் பயின்றிடச் சிறந்தமொழி – அது
இறைவன் உனக்கென வரைந்தமொழி!

தமிழினம் எய்திய பெரும்பேறு – அது
தாய்மொழி தமிழெனும் அரும்பேறு
அமிழ்தினை உரிமை அடைந்தவர் யாரும்
அருந்தா திருந்தால் அவப்பேறு – தமிழ்
அமிழ்தம் அருந்துதல் தவப்பேறு!
மலேசியப் பாவலரும்
தொல்காப்பிய அறிஞருமாகிய
கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அப்பா கொண்டுவந்த ஆப்பிள்

சிலகாலத்துக்கு முந்தி
அது.
அப்பம்மா சாக முதல்
சந்திரிக்காவின் காலத்தில்
கொழும்பில் இருந்து
அப்பாவுடன் வந்திருந்தது.

இலைகள் எல்லாம்
பழுப்பாக உதிர்ந்தனவாம்
அந்தக்காலத்தில்..
சொல்லுவார்கள்.

எல்லோருக்கும் போதவில்லை
ஒரு அப்பிள்.
சின்னக்கீலமாக ஓன்றும்
அம்மா கடித்ததில்
பாதியுமாக
என்பங்கு கிடைத்தது.

கொழும்பில் இருந்து
யாழ்ப்பாணத்திற்கு பயணித்திருந்தது
அந்த
சின்னச் சிவப்பு அப்பிள்.
வெட்டவே மனமில்லை எனக்கு.
நீண்டதூரம் பயணித்திருந்தும்
கம்பீரமாய்ப் பளபளத்தது.
கிளாலிக்கடலில்
சூட்டுச்சத்தத்துக்கு பயந்து
அப்பாவின்
கால்சட்டைக்குள் ஒளித்துக்கொண்டதாம் அது.

அப்பாவின் தடவலில்
அதன்
காம்பு மடங்கி நிமிர்ந்தது….

அந்தச்சேற்றுக்காட்டுப்பாதைகளில்
எல்லாம்
நிலவுடன் பேசிக்கொண்டு
அப்பா நடக்கும்போது தன் அழகை
நிலவுடன் ஒப்பிட்டு
பீற்றிக்கொண்டதாம்.

தன்
சின்ன மகனைப்பற்றி
அப்பாவின் பேச்சைக்கேட்டு
அமைதியான
வெள்ளைப்பனி கொட்டும்
தனது நாட்டைப்பற்றி
உச்சியில் தெரிந்த பராலைட்டை
உற்றுப்பார்தவாறு
ஏக்கமாக முணுமுணுத்ததாம் அப்பிள்.

தலைக்குமேல் கீச்சிட்ட
ஷெல்லி;ன் சிதறல்களிடம் தப்ப
தலைமேல் கைவைத்ததை
அதேபோல் நடித்துச்
சேட்டை செய்ததாம் அது.

தொண்டை வறண்டு
சொண்டுவெடித்த நேரங்களில்
அரோகராச்சொல்லி

உதவிசெய்ததாம் அந்த அப்பிள்.

தட்டிவானில்
சாவச்சேரி தாண்டும்போது
வானின் துள்ளலுக்கேற்ப
லயத்துடன் வந்த
அப்பிளின் பெருமூச்சு
காற்சட்டையில் வெப்பமாக படிந்ததாக அப்பா சொன்னார்.

மிஞ்சிப்போன
அப்பிளின் காம்பை
புத்தம் ஒன்றினுள் வைத்தேன்.
நெடுங்காலம்
இந்த அப்பிளின் கதையை
மக்கள் சொல்லித்திரிவார்கள்
அப்பாவுக்கு நான்
உறுதி சொன்னேன்.

ஆதாரத்திற்கு
அந்தக் காம்பு இருந்தது என்னிடம்.
இரண்டுபக்கமும் அழுத்தப்பட்டு
சப்பையாய்ப்போய்..

ஆதாரத்திற்கு
அந்தக்காம்பு இருந்தது என்னிடம்.

சேரன்கிருஷ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஈழ சகோதரர்கள்

ஒரு சொற்ப கதறலாக இருக்கலாம்
யாருக்கும் கேட்காத அளவிற்கு
இரைச்சலாக இருக்கலாம்
அழுது வடியும் கண்ணீரின்
சோம்பல் ஒலியாக இருக்கலாம்
கைகளை நீட்டி அவர்கல் கேட்பது
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும்
ஒரு சராசரி வாழ்க்கையைத்தான்.










அகம் விரிகிறது
ஒவ்வொரு துளியிலும்
ஒவ்வொரு இழப்பிலும்
ஒவ்வொரு பிரிவிலும்
ஒவ்வொரு நகர்விலும்
ஒவ்வொரு கால்களிலும்
ஒவ்வொரு முதுகு மூட்டைகளிலும்
அகம் ஒரு நாடாகியிருந்தது
நான் அகதியாகிருந்தேன்

விட்டுவந்த இடங்களிலெல்லாம்
திட்டுத்திட்டாக வீடுகளும்
மனிதர்களும்

கே.பாலமுருகன்

~~~~~~~~~~~~~~~
தும்பினியின்
இடுப்பினில்
தெரியுது
தமிழீழம்














சும்மா கிடந்த நாம்..
தமிழீழ விடுதலை என்றோம்..
ஆயுதம் எடுத்து
ஆலயத்தில் கொள்ளையடித்தோம்..!
தமிழ் மக்களின் தலையினில்
நன்றே..
மிளகாய் அரைக்க கற்றுக் கொண்டோம்..!
ஆட்காட்டி
வயிறு வளர்த்தோம்..!

போகும் வழி
இடையில் மறந்தோம்..
சிங்களச் சீமையில்
சீமைப் பசுக்களிடையில்
சரணடைந்தோம்..!
தாடி வளர்த்து
கம்னீசியம் காட்டினோம்
வெள்ளை ஜிப்பாவில்
ஜனநாயகம் பேசினோம்
புலி எதிர்ப்பும்
தமிழீழ அழிப்புமே
எங்கள் அரசியலாக்கினோம்.

இன்று…
ஆக்கிரமிப்பு படைகளோடு
தும்பினியின் இடுப்பாட்டத்தில்
சதியோடு குதி போடுறோம்..
தெரியுது தமிழீழம்..
சிங்களச் சீமைப்பசுவின்
சிற்றிடையில் என்று
வாக்குக் கேட்கிறோம்.

மத்தியில் கூட்டாட்சி
மாநிலத்தில் சுயாட்சி
எல்லாம் மாய மான் விளையாட்டு..
பிரபாகரன் எனும்
பெரும் வீரன் இருந்த
பயத்தில்..
உளறித் தள்ளினோம்..!

உறுதியாய் சொல்கிறோம்..
அன்றும் இன்றும் என்றும்
எங்கள் வாழ்விடம்..
சிங்களப் பாசறை..!
அங்கே நாங்கள்
சுதந்திரப் பறவைகள்..!

முழங்குகின்றோம்..
சிங்களத்தி
தும்பினியின்
இடுப்பினில் தெரிவது
தமிழீழம் என்றே..!

வாருங்கள் தமிழ் மக்களே
புலம்பெயர்ந்த பெரு வீரர்களே..
கூடிக் கூத்தடித்து..
உணருங்கள் அவள் இடுப்பை
காணுங்கள் தமிழீழ சுகமதை..!

கூவி அழைக்கின்றோம்..
சிங்களத்தியோடு கூடி
உருவாக்குங்கள்
சிங்க – தமிழ் பரம்பரை ஒன்றை..!
அப்போதே காணலாம்
சிங்களத்தீவினில்
தமிழருக்கு ஓர்
“நிரந்தர” விடுதலை..!
அதுவரை
எப்போதும்..
புலி எதிர்ப்பே
எங்கள் தாகம்..!

http://kuruvikal.wordpress.com/

~~~~~~~~~~~~~~~
யாரு
சாகடிச்சாங்க
அவரை

அவரு செத்துட்டாருன்னு
சொல்றாங்க
அவரோட படத்தை காட்டினாங்க
அவர் மகன் செத்ததாக
சொன்னாங்க அவன் படத்தையும்
போட்டாங்க
செத்தது அவங்க இல்லைங்க
எங்களோட நம்பிக்கை
அவரு என்ன செஞ்சாருன்னு
உனக்குன்னு கேட்டாங்க
எனக்காக போராடினாருன்னேன்
நிறைய பேர கொன்னாரு
நிறைய பேருக்கு எதிரியானாருன்னு
நிறைய தப்பு செய்தாருன்னும்
சொன்னாங்க
தமிழனா பிறந்து
தமிழனுக்கு போரிடியதுதான்
பெரிய தவறோன்னு நினைக்க தோணுதுங்க
எட்டாப்புதான் படிச்சாருன்னாங்க
எத்தனை வகுப்பு அதிகம் படிச்சவந்தான்
அவரை காட்டி கொடுக்கிறானன்
என்ன செய்ய படிப்ப வச்சுங்க
அவரு இருந்தப்ப எல்லாரும்
பயந்தாங்க
என்னை அடிச்சா அவரு வருவாருன்னு
இப்ப என்னை கொன்னாலும்
யாருங்க வருவாங்க
தத்துவம் கம்யூனிசம் எதுவும்
தெரியாதுங்க அவருக்கு
ஆனா எங்களுக்கு ஒண்ணுன்னா
அவர் வருவாருன்னு
என்னோட விரோதிக்கும் தெரியுங்க
எங்களுக்கு கஞ்சி
இல்லாம போச்சு
நாதியில்லாம போச்சுங்க
பெரிய பெரிய விசயம் பேசினவங்க
ஒண்ணு மட்டும் செய்யுங்க
அவரு செஞ்சதுல கால்வாசி
செய்யுங்க
அப்பதாங்க அவர குறைசொல்ற
தகுதி வருங்க
அவரு பெரிய சண்டைகாரருங்க
கோபக்காரருங்க
அவரு ஜெயிச்சப்ப எல்லாம்
பாராட்டுனாங்க
தோத்ததும் அவர திட்டுறாங்க
இவங்கல்லாம் எதையாவது
புடுங்கட்டுங்க அவர்தான்
இல்லைன்னு சொல்றாங்களே
அப்படியே இருக்கட்டுங்க
இவங்க எதாவது செய்யட்டும்
இனிமேலாவது குறை சொல்றத
நிறுத்திபுட்டு
நிசமா சொல்றேங்க
அவரோட துவக்கு இன்னும்
இருக்குங்க
அது துரோகிகளை இன்னும்
மறக்கலைங்க
நீங்க பார்க்கதான போறீங்க
என்ன நடக்குதுன்னு
ஆனா சொல்றேங்க
ரொம்ப நாளைக்கு
நாங்க அடிவாங்க மாட்டோங்க
நாங்க அடிச்சோம்னா
அப்புறம் நீங்க இருந்த
இடமே இருக்காதுங்க
வரேங்க

--
தியாகு
கணினிப்பொறியாளர்
தமிழ்நாடு

வாயடைத்துப்
போனோம்

முருகையன்

'என் நண்பா, மெளனம் எதற்கு?'
என்று கேட்டிருந்தாய்.
வாயடைத்துப் போனோம்; வராதாம் ஒரு சொல்லும்.
'திக்' கென்ற மோதல் -
திடுக்கிட்டுப் போனோமே!

பொய் வதந்திக் கொள்ளி பொசுக்கென்று போய்ப்பற்ற
ஏற்ற வகையில்
இதமான நச்செண்ணெய்
ஊற்றி
அதில் ஊற வைத்த உள்ளங்கள் இல்லாமல்
இத்தனை தீய எரிவு நடைபெறுமா?

எத்தனை தீய எரிவு -தலையுடைப்பு,
குத்துவெட்டு, பாயும் குருதிக் குளிப்பாட்டு?

சற்று முன்னர் மட்டும் சகஐமாய்ச் சாதுவாய்ப்
பேசி இருந்த பிராணி
சடக்கென்று
வாரை இடுப்பாற் கழற்றி,
மனங்கூசாமல்
ஓங்கி விளாச ஒருப்பட்ட சிந்தையதாய்
மாறிவிட்ட விந்தை மருமம் என்ன?
சுர்ரென்று
சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன?
கொள்ளை, திருட்டு, கொலைகள், கடையுடைப்பு,
பிள்ளை அரிவு, பிடுங்கல், வதை
புரிந்து
சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன?

ஒன்றும் எமக்குச் சரியாய் விளங்கவில்லை.
'திக்'கென்ற மோதல் - திக்கிட்டுப் போனோம் நாம்.
வாயடைத்துப் போனோம்;
வராதாம் ஒரு சொல்லும்.

(1978 / மல்லிகை)

கவிஞராகவும், பத்திரிகையாளராகவும்,
இலக்கியவாதியாகவும் அறியப்பட்டவர்
சந்திரபோஸ் சுதாகர்.
இவர் கடந்த 16-04-2007 இரவு
சிங்களம் பேசிய ஆயுததாரிகளால்
வவுனியாவில் அவரது வீட்டில்
வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது கவிதை ஒன்று இங்கே


சித்திரவதைக்குப்
பின்னான
வாக்குமூலம்


உன்னை அவர்கள் கைது செய்து
எங்கோ கொண்டு சென்று விட்டார்கள்
எனது குழந்தைக்குப் பிடித்தமான
உனது 'சேட் கொலரின்' மடமடப்புச் சத்தம்
இன்னும் அவனது விரலிடுக்குகளில்
கேட்டுக் கொண்டேயிருக்கிறது
அவர்கள் வாகனங்களோடு
நட்சத்திரங்களோ, ஆட்காட்டிகளோ இல்லாத இரவையும்
சூரியனை மறைக்கவும் கூடிய ராட்சத சிறகொன்றையும்
கொண்டு வந்திருந்தார்கள்
அது
இன்னும் மிக நீண்ட காலத்தின் பின்னும்
எனது குழந்தையின் கண்களில்
எங்களுடனேயே தங்கியிருக்கிறது
அவர்களால் உன்னைத் தலைகீழாகத் தொங்கவிடவும்
நீண்ட கூரிய ஆயுதங்களால் தாக்கவும்
கொல்லவுங் கூட முடியும்
அவர்கள் பற்றிய உனது கணிப்பீட்டை
அவர்களின் துப்பாக்கிக் குழல்களும்
சப்பாத்துக்களில் பூசப்பட்ட குருதியும்
நிரூபித்து விட்டது
நிரூபித்து விட்டது
நம்பிக்கை கொள் நீ பேசாதிருக்கும் வரை
உண்மையில் நீ பேசாதிருக்கும் வரை
அவர்கள் தோற்றுப் போவார்கள் நிரந்தரமாகவே
சிறைக் கம்பியிடுக்குகளின் வழி
ரோஜாப் பூக்களின் வாசனையும்
வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகளும்
உன்னை எப்போதுமே வந்தடையாதெனினும்
நம்பிக்கை கொள்
நீ பேசாதிருக்கும் வரை
அவர்கள் தோற்றுப் போவார்கள்
நிரந்தரமாகவே.

போஸ்நிஹாலே



சு.வி.....மண்ணை யாசித்த ஒரு கவிஞன்


தாயக மண்ணை நேசித்த
கவிஞர் சு. வில்வரத்தினம் அவர்கள்
9.12.2006ல் காலமானார்.
அவரது நினைவாக அவரது
கவிதை ஒன்று இங்கே.


மீண்டும்
உயிர்த்தல்


கல்லறைகள் ஒரு நாட் பெயரும்
அன்று
புதைகுழி நீத்து எம் உணர்வுகள்
உயிர்பெறும்.

சமாதி கட்டியாயிற்று என
ஒருகணம் சந்தோஷத்தோடு
சுகபாணம் அருந்திக் களித்திருப்பீர்
சிறு பொழுதே.
அதற்குள் மீண்டும்
உயிர் பெற்றெழுவோம்.

எதிர் பார்த்திருக்க மாட்டீர்
எம் உயிர்த்தெழலை
உம் திகைப்புகள்
கல்லறையாய் மாற.

முன்னொருகால்
சிலுவை தாங்கிய நாயகனின்
சுவடுகள் இன்னும் அழிந்து படவில்லை
இதோ மீண்டும் அவன்
உயிர்ச் சுவடுகளின் அரவம்
காற்றில் உயிர்க்கும்
ஆடை அசைவின் தொனி.

சிலுவையின் கீழ் அவன்
சிந்திய குருதித் துளிகள்
என்றுமே காய்ந்திலது
இதோ
இன்னும் பச்சையாக
இன்றைக்கும் சத்தியமாய்.

சிலுவையில் அறைந்தவர்களும்
எங்கேயுமல்ல
இங்கேதான் இன்னும்
உயர் பீடங்களில் இருக்கை போட்டுள்ளார்.

முள் முடி சூட்டியவர்
சவுக்கால் அடித்தவர்கள்
ஆணி அறைந்தவர்கள்
இன்னும் உள்ளார்;
இன்னும் உள்ளார்.
ஆட்சி பீடங்களில்
அதிகாரத்தோடு உள்ளார்.

அவர்களின் கொடுமையில்
சிலுவை தாங்குவோர்
சிந்தும் குருதித் துளிகள்
இன்னும் இந்தப்
பூமியை நனைக்கிறது.

ஒடுக்கு முறைக்குள்ளானோரின்
ஒவ்வொரு கல்லறையிலும்
அவர்கள் நினைப்பது போல்
உதிரம் உறைந்து விடுவதில்லை,
உட்கனன்று கொதிக்கும் அது
புதிய உருவெடுக்கும்.
2
சிலுவை ஏற்றுவோர்க்கும்
சிலுவை சுமப்பவர்க்கும்
இடையிலுள்ள முரண்பாடு
இன்று நேற்று எழுந்ததன்று.

மோதி மோதி முரண்பட்டுப் புதிது
குதிர்வது உண்மையே.
ஞானம்-அஞ்ஞானம்
தர்மம்-அதர்மம் என
ஓதிற்றே வேதம் அன்று,
அதுவேதான்.

அந்த வரலாற்றின் ஓட்டம்
என்றும் உறைந்து போவதில்லை
சிந்தும் ஒவ்வொரு வியர்வைத் துளியிலும்
குருதித் துளியிலும் உறைந்து படாமல்
உந்தி எழும் உயிரோட்டம் அதன் இயல்பு.
ஒவ்வொரு புதுத்தளமாய் அது
களம் விரிக்கும்.
தளம் உயர்த்தும்.

இன்றைக்கும் அதன்
இயல்பு உந்தல் நிகழ்வேதான்
உண்மையைப் புதைகுழிக் குட்படுத்திப்
புறம் வீற்றிருக்கும் பொய்மையின் பூச்சுகள்
பொடி உதிர இதோ
உண்மை உயிர்த் தெழுகிறது
. அஞ்ஞான இருட் பாறை
அடைப்புக்குள் அதிர்வுறவரும்
உண்மையின் வெளிப்பாடு சிலவேளை
அசிங்கமாய்ப் படலாம்,
அருவருப்பாய்த் தெரியலாம்.
அவையெல்லாம் பொய்மை சார்ந்த
பூச்சுகள் போலி மதிப்பீடுகள்.

தூண் பிளந் தெழுந்த
நரசிங்க அவதாரத்தின்
பிறாண்டல்களால் பிளவுற்று
உதிரம் வழியும் அசுரனின் வீழ்ச்சி
எழுதப்படுகிறது.
அதன் இன்றைய சாட்சியாய்
இங்கும் நிகழ்வன
புத்தெழுச்சியின் கோலமே!.....

பொத்திக்கிட்டு
போங்கடா!

'சின்னப் பசங்கள எதுக்கு கட்டாயப்படுத்தி சேக்குறாங்க' -
என்று அக்கறைப்பட்டவர்களே!
இப்போது
சின்னஞ்சிறுத் தளிர்கள்தான்
செத்துக் குவிகின்றன..
எங்கே போனீர்கள்?

'கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலத்தான் சாவு' -
என்ற தத்துவஞானிகளே!
இங்கு
பேனா பிடித்தப் பிள்ளைகள்தான்
பிணமாய் கிடக்கின்றன.
எங்கே போனீர்கள்?

'ஒரு அரசாங்க இராணுவம்
எப்படி தன்நாட்டு மக்களையே கொல்லுவாங்க,
சும்மா கதையளக்காத ..' -
என்னும்
அரைவேக்காட்டு அறிவுஜீவிகளே!
புரிகிறது.

இனிமேலும்
அவர்கள் அந்நாட்டு மக்களாய்
சவக்குழியில் குவியமாட்டார்கள்.
எங்கே போனீர்கள்?
இன்னமும்'
அமைதியா பேசித் தீர்க்கவேண்டியதுதான ..
'என்பீர்களேயானால்,
'பொத்திக்கிட்டு போங்கடா.'

--ஞானக்குமரன்


ஆதிக்க கூப்பாடும்,
ஆலகால
விடமும்
பாதிக்க
முடியாது


அழைக்கின்றீர்கள்…. மதிப்பளிக்கிறோம்….
மனிதம் செத்திருக்கும் அனைவரிடமும்
இன்னும் மானுடத்தை எதிர்பார்த்தபடி….
மென்மேலும் எங்களுக்குள்
இன்னல்களைச் சுமந்தபடி….
கரங்களோடு எங்கள்…
கண்ணீரையும் கட்டுப்படுத்தி… இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
உயிர் வலிகளை எடுத்துரைக்க…
உங்களின் மானுட உயிர்ப்பை அளவெடுக்க..
மென்மேலும் எங்களுக்குள்
இன்னல்களைச் சுமந்தபடி….
கரங்களோடு எங்கள்…
கண்ணீரையும் கட்டுப்படுத்தி… இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
எம் உறவு…
எம் வீடு…
எம் ஊர்…
எம் தேசம்..
எங்களுக்கானதை எம்மிடம் சேர்க்க
ஆவன செய்ய உங்களால் இயலுமா?
எங்களை நாங்களே காத்திடத் துணிந்ததை
பயங்கரவாதப் பட்டியலில் இடுகிறீர்! நசியுண்ட எறும்பும் தனைக் காக்கக் கடிக்கும்
அது உங்கள் பார்வையில் பயங்கரவாதமா?
உயிர்வலி எங்களுக்கு…
உணர்வுகளைத் தூக்கிலிட்டு
எங்கள் சாவிற்கு…
எமனுக்கு வரவெழுத எமக்கென்ன தலைவிதியா?
மறுபடியும், மறுபடியும் மரணத்தின் ஓலம்தான்
மண்ணிடையே எமக்கான விதியாக்கப்படுகிறதே.
கண்ணிருந்தும் குருடான கதை உங்களதா?
உலக நாடுகளே!
உங்கள் எவராலும் விதி மாற்ற முடிந்ததா?
தடை போட்டீர்கள்..
காரணக் கதைகள் ஆயிரம் உரைத்தீர்கள்.
அல்லைப்பிட்டி, வங்காலை, வல்லிபுனம், சம்புூரென
எள்ளி நகைக்கிறதே உங்கள் காரணங்கள்
அவை உங்களுக்குப் புரிகிறதா?
வாழ்வுக்காய் எங்கள் போராட்டம்
கொடிய கந்தக நெடியிடையே எம் வாழ்வோட்டம்
புனர் வாழ்வும் முடக்கப்படும் புூமியிலே
ஏதிலிகளாய் எம் வாழ்வும் தொடரும்
புரிகிறதா?……
அல்லது புரியாமலே இன்னும்
உண்மையொளி காணாக் குகையில்
இருள் மூடிக் கிடக்கின்றீர்களா?
கிழக்கு முகம் கறுப்பதில்லை
காலதேவன் கிறுக்கலிலே
சூரியன் இருண்டதில்லை.
கோல விளக்கொளியில் கூறுகெட்ட வாழ்வெமதல்ல..
கந்தகப் பிழம்பிடையே.. களமாடும் புதல்வர்களைக்
கொண்டெழுந்ததே எமது வாழ்வு
திசைவெளிகள் எங்கெனும் இசைவாக்கம் என்பது
எம்மினத்தின் அசையாத வாழ்வுக்கான தவம்.
உயிரெடுத்து உரம் தொடுத்த
எங்களின் தாயகத்து மண்மீட்பை…
ஆதிக்க கூப்பாடும், ஆலகால விடமும்
பாதிக்க முடியாது
ஆதலால்….
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
உயிர் வலிகளை எடுத்துரைக்க…,
உங்களின் மானுட உயிர்ப்பை அளவெடுக்க..
மென்மேலும் எங்களுக்குள்
இன்னல்களைச் சுமந்தபடி….
கரங்களோடு எங்கள்…
கண்ணீரையும் கட்டுப்படுத்தி…
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
-- வல்வை சகாறா.
இறந்துவிடு!

க.வாசுதேவன்

அம்மா
இனி
நீ
இறந்து
விடு.
பயமும் பட்டினியும்
நோயும் என இன்னமும்
எத்தனை காலத்திற்கு
நீ செத்துக்கொண்டேயிருக்கப்போகிறாய் ?

ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்கும்
ஒரு நகரிலிருந்து இன்னொரு நகரிற்கும்
ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டிற்கும்
ஒரு நோயிலிருந்து இன்னொரு நோயிற்கும்
ஒரு பசியிலிருந்து இன்னொரு பசியிற்குமென
ஒரு பொதியையும் காவிக்கொண்டு
இன்னமும்எத்தனை காலத்திற்கு
அலையப் போகிறாய் ?

உன் பிள்ளைகளையும்
பேரப்பிள்ளைகளையும் கழுகுகள்
காவிக்கொண்டு செல்வதையும்
கண்டுவிட்டுத்தான் மடிவேன் என
ஏன் அடம்பிடிக்கிறாய்?

அம்மா
இனி நீ இறந்து விடு.

அனைத்தும் பயனற்றுப்
போய்விட்டது என்பதை
அறிந்த பின்தான் போகவேண்டும்
என நீ அடம்பிடிப்பது
அறிவீனம் அம்மா.

ஏழு கோடி தமிழர்கள் உலகிலிருக்கிறார்கள்
ஈழத்தில் நாம் எவ்வாறு நாம் அனாதைகளானோம்
எனக் கேட்காதே

உலகில் பன்றிகளும்தானே
பலகோடிகள் இருக்கின்றன.
அவ்வப்போ முணுமுணுத்துக் கொள்வதைத்
தவிர அவையால் என்னதான் செய்யமுடியும்?

நீ இறந்த செய்தி வந்ததும்
தயாராகவிருக்கும் இடுப்புப்
பட்டியை நான் மாட்டிக்கொள்வேன்.

சிங்களமும் மந்திரம் செபிக்கும் பன்றிகளும்
ஒருமித்துக்கூறும் அப்போ
நான் ஒரு பயங்கரவாதியென்று.

நன்றி/அப்பால்தமிழ்
பார்க்கப்
பார்க்க
இதயம்
வலிக்கிறது!


பஞ்சில் தீவைத்துக் குளிர் காயும் சிங்களமே!
பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றாடும் சிறுஇனமே!
அஞ்சிப் பதுங்குபவர் அழித்தாடும் இழிஇனமே!
மிஞ்சும் உன்வெறியால் அழிந்தொழியும் உன்படையே!

தலையிலே எதுவுமின்றித் தலைமைதாங்க மடையர்களை
தலைவர் என்றுநம்பி நீயெடுத்து வணங்குகிறாய்
தலையில் மயிரோடு மூளையும் அற்றவரை
தலைகெட்ட மடஇனமே! நீ நம்பி அனுப்புகிறாய்.

காடையர் கூட்டமொன்று அன்று வந்து புரட்சியென்று
நாட்டை அழிக்கப் பார்த்த நாளையும்நீ மறந்துவிட்டு
நாட்டைப் பிழைவழிக்குள் அனுப்பிடநீ உதவு கின்றாய்
நாட்டை அழிப்பதுதான் நாட்டைக் காப்பதுவா?

ஊடகம் என்று ஒரு கும்பல் வைத்திருந்து
ஊதாரித் தனமாகப் பொய்சொல்லி ஏய்த்து விட்டால்
-'சிந்தனைச் செல்வர்' எழிலன் உலகம் மயங்கிடலாம் எனநீயும் நம்புவது
உன்கண்ணைக் கட்டிப்பகல் இரவென்றே நம்புதல்தான்.

பார்க்கப் பார்க்க எங்கள் இதயம் வலிக்கிறது
தாக்கத் தாக்க எங்கள் உள்ளம் வலுக்கிறது
தோற்கத் தோற்க உங்கள் கோழைப் படைவெறியர்
பார்க்கப் பார்க்க எங்கள் விடுதலை விரைகிறது.

இரக்கம் என்பதினி இதயத்தில் சுரக்காது
உறக்கம் உயர்தமிழர் ஒத்துழைப்பில் இருக்காது
உரத்துக் குரல்கொடுத்து உலகத்தையே அசைத்திழுத்து
உதித்தே தமிழீழம் நிமிரும்வரை ஓயாது.
-- எழிலன்

Powered by Blogger

Subscribe to
Posts [Atom]